Sunday, 31 March 2013

hamsadthvani

ஹம்சத்வனி 

சதா சிவன் மைந்தனே கஜமுகனே சந்ததம் உந்தன் அருள் 
தந்தருள் விநாயகனே    [சதா]

பதார விந்தமலர் கதியென நம்பினேன் 
பரம்பொருளே அபயம் வரம் தருவாய் சரணம் 

துரிதம் 

கார்த்திகேயனின் காதல் வள்ளியை கடிமணம் செய்ய 
கரனாதிபா மூஷிக வாகன உன்னை நிதம் துதிக்க
எண்ணை ஆதரி கருவும் உருவும் நீ , காணும் யாவும் நீ,
கழல் தாராய் கணபதி மகிபா நின்னடி மறவா அன்புடன் 
மகாராஜன் பாட  வந்தருள் [  சதா ]

No comments:

Post a Comment